லண்டனில் 03 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து!
லண்டனில் உள்ள நர்சரி ஒன்றில் நேற்று நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
லூயிஷாமின் (Lewisham) கேட்ஃபோர்டில் (Catford) உள்ள ருஷே கிரீன் நர்சரியில் (Rushey Green Nursery) இந்த தீவிபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காற்றில் பெரிய அளவிலான புகை மூட்டம் சூழ்ந்ததால் உள்ளுர்வாசிகள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தீவிபத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், சொத்துக்களின் சேதம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




