ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்தால் பாரிய சர்ச்சை

ஜெர்மனியில் கடந்த சில வாரங்களுக்கு முதல் அதிதீவிர வலது சாரி கட்சியான AFD கட்சியினர் மற்றும் ஒஸ்ரியா நாட்டினுடைய இரண்டிடேக்விவேகெம் என்று சொல்லப்படுகின்ற மேலும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு ஜெர்மனியின் நகரமான போஸ்டமில் ஓர் கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்கள்.

இந்த கூட்டத்தில் ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியான CDU என்று சொல்லப்படுகின்ற சில அரசியல் பிரமுகரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களுக்கு எதிரான முறையில் ஜெர்மனியில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆடன் நகரத்தில் 10 000க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதாவது அதிதீவர வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்தை கொண்ட இந்த அமைப்புக்கள் ஜெர்மனியில் உள்ள வெளிநாட்டவர்களை முற்றாக அகற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஜெர்மனியில் பிரஜா உரிமை பெற்றவர்களையும் அதாவது வெளிநாட்டு பின்னணியை கொண்டு ஜெர்மன் நாட்டில் பிரஜா உரிமை பெற்றவர்களையும் ஜெர்மனியை விட்டு அகற்ற வேண்டும் என்ற கருத்து குறித்த கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்