இலங்கை

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பாரிய விபத்து

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தில் இரு சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.

ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த பவுசரும், திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து லொறியும் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு சாரதிகளும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் கலக்கம் காரணமாக லொறி வீதியின் குறுக்கே சென்றதால் முன்னே நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பவுசர் விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகிறது.விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ-பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்