இலங்கை

வத்தளை நகரில் மஸ்கெலியா பெண்ணுக்கு கத்திரியால் குத்து!- கணவன் கைது

வத்தளை நகரில் உள்ள வைத்திய பரிசோதனை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று (15) காலை அப்பெண் பணிபுரியும் வைத்திய பரிசோதனை நிறுவனத்திற்கு அவரது கணவர் வந்து அவருடன் தகராறு செய்துள்ளார்.

பின்னர், தகராறு நீண்டதில், சந்தேகநபரான கணவர் அந்த இடத்தில் இருந்த கத்தரிக்கோல் ஒன்றை எடுத்து குறித்த பெண்ணின் கழுத்தில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேகநபரான கணவன் வத்தளை பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!