முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மார்க் கார்னி : உறவை வலுப்படுத்த முயற்சி!
கனடா பிரதமர் மார்க் கார்னி ( Mark Carney) முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
சமீபகாலமாக சிக்கலாக உள்ள டெல்லியுடனான உறவுகளை மீட்டெடுக்கவும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் கார்னி முயற்சிக்கின்ற நிலையில், இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அவர், வணிகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார், மேலும் வரும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்கால கூட்டாண்மைக்கான “நேர்மறையான உந்துதலையும் பகிரப்பட்ட பார்வையையும்” மீண்டும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மோடிக்கும் கார்னிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கியமான கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





