தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சி – பிரித்தானிய அரசாங்கத்தின் மீது பலரும் குற்றச்சாட்டு
பிரித்தானிய அரசாங்கம் 63 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள், விமர்சித்துள்ளனர்.
ஸ்கை நியூஸ் தகவலின்படி, 05 அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சில தேர்தல்கள் ஏற்கனவே 2025 இல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத் தலைவர் விஜய் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் சில தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திட்டமிடப்பட்ட தேர்தல்கள், மிக அவசரமான சூழ்நிலைகளில் மட்டுமே ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாமதமான மாற்றங்கள் நிர்வாகிகளுக்கு உதவாது என்றும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய
விஜய் ரங்கராஜன் அவர்களின் கவலை நியாயமானது என்றும் தெரிவிததுள்ளார்.





