மணமகளுக்குப் பதிலாக மாமியாரைத் திருமணம் செய்த நபர் – மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரூட் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மணமகளுக்குப் பதிலாக மாமியாரை திருமணம் செய்துள்ளார்.
21 வயது மந்தாஷாவை திருமணம் செய்துகொள்ளவிருந்த அசீம் தன்னை ஏமாற்றித் திருமணம் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
திருமணம் முடிந்த கையுடன் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினார்.
மணமேடையில் அமர்ந்திருந்தது மந்தாஷா அல்ல மந்தாஷாவின் 45 வயது தாயார் என்பது அவருக்குத் தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அசீம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து இருதரப்புக்கும் இடையே சமரசப்பேச்சு நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
அசீம் தமது புகாரைப் பின்னர் மீட்டுக்கொண்டார் என்றும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அசீம் திருமணத்தின்போது 500,000 ரூபாய் பணத்தை மந்தாஷாவின் குடும்பத்திற்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது.