இந்தியா

மணமகளுக்குப் பதிலாக மாமியாரைத் திருமணம் செய்த நபர் – மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரூட் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மணமகளுக்குப் பதிலாக மாமியாரை திருமணம் செய்துள்ளார்.

21 வயது மந்தாஷாவை திருமணம் செய்துகொள்ளவிருந்த அசீம் தன்னை ஏமாற்றித் திருமணம் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

திருமணம் முடிந்த கையுடன் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினார்.

மணமேடையில் அமர்ந்திருந்தது மந்தாஷா அல்ல மந்தாஷாவின் 45 வயது தாயார் என்பது அவருக்குத் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அசீம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து இருதரப்புக்கும் இடையே சமரசப்பேச்சு நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.

அசீம் தமது புகாரைப் பின்னர் மீட்டுக்கொண்டார் என்றும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அசீம் திருமணத்தின்போது 500,000 ரூபாய் பணத்தை மந்தாஷாவின் குடும்பத்திற்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே