இந்தியா

காதலியின் வீட்டில் சடலமாக தொங்கிய நபர்! – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால். இவர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது.அதனைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. பின்னர் காதலர்கள் இருவரும் இரவில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இதனை அறிந்த பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இக்பால் அவரது காதலியின் வீட்டில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதையடுத்து இக்பாலின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இக்பாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இளைஞரின் மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!