இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் “சர்வம்” திரைப்பட பாணியில் உயிரிழந்த நபர்

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நைலான் மாஞ்சா நூல் தொண்டையை அறுத்துக் கொண்டதில் 23 வயது இளைஞர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பதார்டி கிராம வட்டப் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சோனு கிசான் தோத்ரே, தியோலாலி முகாமில் இருந்து பதார்டி பாட்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​மாஞ்சா நூல் அவரது தொண்டையை அறுத்துக் காயப்படுத்தியது.

இந்திராநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அந்த நபரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக சோனு பணியாற்றி வந்தார் என்றும், விபத்து மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி