ஐரோப்பா செய்தி

​பிரித்தானியரின் சர்ச்சைக்குரிய பயணம் – லண்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரச்சினை

பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஒருவர் கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணித்துள்ள சம்பவம் பாரிய பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து குறித்த பயணி தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விவகாரத்தில் விமான நிலையம் பதிலளிக்க வேண்டும் என்று உள்விவகார செயலாளர் James Cleverly கோரியுள்ளார். அதிர்ச்சியடையவைக்கும் இந்த சம்பவமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி நடந்துள்ளது.

46 வயதான Craig Sturt என்ற வேலையற்ற நபர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, எந்த வித பாதுகாப்பு மற்றும் ஆவண சோதனை எதையும் முன்னெடுக்காமல் விமான பேருந்தில் ஏறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக அமெரிக்காவுக்கு புறப்படும் நூற்றுக்கணக்கன பயணிகளுடன் அவரும் பயணித்துள்ளார். அந்த வாய்ப்பை Craig Sturt பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 9 மணி நேரத்திற்கு பின்னர் விமானம் தரையிறங்கியதும் அமெரிக்க அதிகாரிகளிடம் Craig Sturt சிக்கியுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!