இலங்கை

வென்னப்புவ பிரதேசத்தில் மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டியவர் கைது

மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.லுனுவில பண்டிரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் தரம் 04 வகுப்பறையில் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டதன் பின்னர், தனது கையடக்கத் தொலைபேசியில் சில ஆபாச காணொளிகளை பிள்ளைகளுக்குக் காட்டியதாக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தின் போது வகுப்பறையில் ஆசிரியர் இல்லை எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.சந்தேகநபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
See also  இலங்கை பொதுத் தேர்தல் : கட்டுப்பணத்தை செலுத்திய சுயேட்சை குழுக்கள்!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content