உத்தரகாண்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிவபெருமான் வேடமிட்டு சுற்றித்திரிந்த நபர் கைது

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபக் சைனி என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி சிவபெருமான் வேடமணிந்து இருந்த போது பிடிபட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை எல்லாம் அறிந்தவர் என்றும், திரிகல்தர்ஷியின் பக்தர் என்றும் கூறி, பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறான செயல்களில் ஈடுபடுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, குற்றம் சாட்டப்பட்டவர் சிவபெருமான் வேடமணிந்து ஊரில் சுற்றி திரிந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட தீபக் சைனி, ஹரித்வாருக்கு அருகில் அமைந்துள்ள ஜ்வாலாபூர் நகரின் சுபாஷ் நகரில் வசிப்பவர்.
(Visited 1 times, 1 visits today)