இலங்கை

கம்பஹாவில் வளர்ப்பு நாயை எரித்துக் கொன்றவர் கைது!

கம்பஹா, இம்புல்கொடவில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா – இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா இம்புல்கொடவில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டிருந்த பெண் நாய் ஒன்றை கடந்த 10ம் திகதி இரவு அயலவர் ஒருவர் தீ வைத்துள்ளார்.பின்னர் பலத்த தீக்காயங்களுடன் நாயை அதன் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட போதும் அது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் ஜேர்மன் ஷெப்பர்ட் இன நாய்களை வீட்டில் வளர்க்கும் நபர் எனவும், அந்த நாய்களுடன் தீ வைக்கப்பட்ட பெண் நாய் உறவு வைத்து கொண்டதால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட நாயின் உரிமையாளர்கள் சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content