ஆசியா செய்தி

அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவை வலியுறுத்திய மாலத்தீவு அதிபர்

பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் அவதூறு கருத்துக்களை தெரிவித்த சம்பவம் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவில் கசப்பான பக்கங்களாக பதிவாகி உள்ளன. பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மாலத்தீவு மந்திரிகள் மூவரை இடைநீக்கம் செய்வதாக மாலத்தீவு தெரிவித்தது. இதனிடையே மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றிருக்கிறார்.

இந்த பயணத்தின் போது, மாலத்தீவு மற்றும் சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் அதிபர் முய்சு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை அனுப்ப சீனா முயற்சி எடுக்க வேண்டும். மாலத்தீவின் வளர்ச்சியில் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது.”

“மாலத்தீவு வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு திட்டங்களை சீனா தொடங்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் எங்களின் முதன்மை வணிக மையமாக சீனா இருந்தது. இதே நிலை மீண்டும் உருவாக வேண்டும் என விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

(Visited 20 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி