ஆசியா

சீனாவிற்கு விஜயம் செய்யும் மலேசிய மன்னர்!

மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் வியாழன் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்,

இது ஒரு தசாப்தத்தில் மலேசிய மன்னர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயமாகும்

அங்கு அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து அண்டை நாடான சிங்கப்பூர் உடனான இணைப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கு ஆதரவைப் பெறுவார் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

தெற்கு மாநிலமான ஜோகூரில் இருந்து வரும் சம்பிரதாய ஆட்சியாளர், மலேசியாவின் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி அமைச்சர்களுடன் வருவார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

“மலேசியா-சீனா உறவுகள் தொடர்ந்து முன்னோக்கி, ஆற்றல் மிக்க மற்றும் வளமானதாக இருப்பதை உறுதி செய்வதில், இரு தரப்புக்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த அவரது மாட்சிமையின் வருகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது” என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுல்தான் இப்ராஹிம் ஜனவரி மாதம் நாட்டின் 17வது மன்னராக பதவியேற்றார்,

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய மன்னர் ஒருவர் சீனாவுக்குச் சென்றுள்ளார்.
இப்ராஹிம், சீனாவின் இரண்டாம் நிலை அதிகாரியான பிரதமர் லீ கியாங்கையும் சந்திப்பார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content