உலகம்

குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மலேசியா!

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இம்முறை அடுத்த ஆண்டு (2026) முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் (Fahmi Fadzil),  நிதி மோசடிகள் மற்றும்  பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் பாதிப்புகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதே இந்த தடையின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் இந்த தடை சேர்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எழுந்துள்ள உலகளாவிய கவலைகள் காரணமாக வயது வரம்புகளை அமல்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கை எடுத்துள்ளன.

அண்மையில் ஆஸ்திரேலியாவிலும் இவ்வாறான தடை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!