பேரழிவுக்குப்பின் இலங்கைக்கு படையெடுத்த 2,300 சர்வதேச பயணிகள்
2,300 சர்வதேச பயணிகளுடன் இன்று (03)மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பல் நாட்டை வந்தடைந்தது.
“மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்” என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இந்த கப்பலை வரவேற்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை பேரழிவிற்குப் பின்னர் முதல் முறையாக பெரிய சொகுசு சுற்றுலா கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த சொகுசு கப்பலில் இருந்த 2,300 பயணிகளில் 1,600 க்கும் மேற்பட்ட ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் மற்றும் அரை நாள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.





