இலங்கை

மகிந்தவின் இல்லத்திற்காக மில்லியன் செலவில் மின் உற்பத்தி இயந்திரம் கொள்வனவு : VAT வரி சேர்க்கப்பட்டவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்காக மின்சார சபையிடமிருந்து 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய வாட் வரி சேர்க்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர்  ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

இந்த மின் உற்பத்தி இயந்திரத்தை அந்த வீட்டிற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐம்பது மில்லியனுக்கும் குறைவான மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின் சில முதுகெலும்பில்லாத அதிகாரிகள் அதற்கேற்ப கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த இயந்திரம் 220 திறன் கொண்டதாகவும், பழைய VAT 15% வரியே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!