இலங்கை முக்கிய செய்திகள்

பலத்தை காட்டிய மஹிந்த!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் எனவும், அதன் மூலம் கட்சியின் பலத்தை காட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பான்மையான மக்கள் பொதுஜன பெரமுன திரண்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் பொதுஜன பெரமுனவை விட்டு தூரமாகவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் இன்னமும் பொதுஜன பெரமுன கட்சி மீது நம்பிக்கையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலை தனக்கு இல்லை எனவும், கட்சியின் வேட்பாளர் யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்சக்கள் பாடுபடுவார்கள் எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்