அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ – ட்ரம்பிடம் அடிப்பணிந்த வெனிசுலா!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) தாக்குதல்களுக்குப் பிறகு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறினார்.
துணை வெளியுறவுச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் (Christopher Landau), “மதுரோ இறுதியாக தனது குற்றங்களுக்கு நீதியை எதிர்கொள்வார்” என்று கூறினார்.
வெனிசுலாவின் அரசாங்கம் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், அவர்களின் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது. மேலும் நாங்கள் உயிருக்கான ஆதாரத்தைக் கோருகிறோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
நாட்டை விட்டு வெளியேறிய வெனிசுலா ஜனாதிபதி – தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்கா!





