ஐரோப்பா

புதிய டிஜிட்டல் நுழைவு-வெளியேறும் முறையை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டினருக்கான புதிய டிஜிட்டல் நுழைவு-வெளியேறும் முறையை  (EES) முழுமையாக நிறுத்திவைக்குமாறு விமானத் துறைத் தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த முறை இடைநீக்கம் செய்யப்படாவிட்டால் கோடை விடுமுறையில் பயணிகள்  நான்கு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட காத்திருப்பு நேரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய தாமதங்கள் பகுதியளவு வெளியிடப்பட்டாலும் கூட இரண்டு மணிநேரம் வரை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நுழைவு திட்டம் பிரித்தானிய பயணிகள் ஷெங்கன் பகுதிக்குள் முதல் முறையாக நுழையும்போது கைரேகைகள் மற்றும் முக பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும் என்று கோருகிறது.

இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடுகிறது. ஆனால் விமான நிறுவனங்கள் பயணிகள் தாமதங்களை எதிர்கொள்வதாகவும், நீண்ட காத்திருப்பு நேரங்கள் அவர்களை சோர்வடைய செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!