உலகம்

2025 ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடுகள் குறித்த பட்டியல் வெளியீடு!

2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.

அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (163வது இடத்தில்) ரஷ்யா இடம்பெற்றுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்