இலங்கை செய்தி

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபான விற்பனை சடுதியாக வீழ்ச்சி

மலையக பெருந்தோட்டங்களை சூழவுள்ள பகுதிகளில் மதுபான விற்பனை வேகமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் கடந்த முறை மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதன் மூலம் கடந்த விற்பனை விலையுடன் ஒப்பிடுகையில் விற்பனை விலை சுமார் எழுபது வீதமாக குறைந்துள்ளதாக மலையக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலைவாசி உயர்வுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஏழு இலட்சம் என்ற நிலையில் இருந்த இவரது மதுபானசாலையின் தினசரி விற்பனை தற்போது இரண்டு இலட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், மின் கட்டணம் மற்றும் ஊழியர் சம்பளம் செலுத்திய பின்னரும் எவ்வித இலாபமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறுகிய காலத்தில் பல சந்தர்ப்பங்களில் விலை அதிகரித்துள்ளமையும், மலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களின் பொருளாதார நிலை மாறாததும் மதுபானங்களின் விற்பனை குறைவதற்கான பிரதான காரணமாகும்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை