ஜோன்சன் &ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் மீது இங்கிலாந்தில் வழக்கு தாக்கல்!

இங்கிலாந்தில் ஜோன்சன் &ஜோன்சன் ( Johnson & Johnson) நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) கலக்கப்பட்ட குழந்தைகளுக்கான பவுடரை (baby powder) தெரிந்தே விநியோகம் செய்தமைக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
KP Lawவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் தாதுக்களின் கலவையான ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாதுக்கள் புற்றுநோய்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை அறிந்திருந்தாலும் குறித்த நிறுவனமானது எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடாமல் அதனை விநியோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக தூய்மை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக சித்தரிக்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் ஜோன்சன் &ஜோன்சன் ( Johnson & Johnson) நிறுவனம் அக் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. குறிப்பாக புற்றுநோய் ஏற்படும் என்பதை அறிந்திருத்தும் அதனை விநியோகித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அதன் பேபி பவுடர் (baby powder )”தேவையான எந்த ஒழுங்குமுறை தரநிலைகளுக்கும் இணங்குவதாகவும், ஆஸ்பெஸ்டாஸைக் கொண்டிருக்கவில்லை, மேலும் புற்றுநோயை ஏற்படுத்தாது” என்றும் கூறியது.
டால்க் ( talc) கொண்ட பேபி பவுடரின் (baby powder) விற்பனை 2023 இல் இங்கிலாந்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல் அமெரிக்காவில் இது தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பல வழக்குதாரர்களுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.