அறிவியல் & தொழில்நுட்பம்

உலகை புரட்டிப் போடும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! ஆச்சரியத்தில் வல்லுநர்கள்

உலக அளவில் பிரபலம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். Mac என்ற கம்ப்யூட்டர், ஐ போன் என்ற தொடுதிரை அம்சம் கொண்ட செல்போன், ஐ பாட் என்று பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி, டிஜிட்டல் யுகத்தில், பெரிய புரட்சியே, அந்த நிறுவனம் செய்திருந்தது.

இவ்வாறு ஒவ்வொரு முறையும், புதிய நவீன படைப்புகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் ஆப்பிள் நிறுவனம், தற்போது இன்னொரு வித்தியாசமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதாவது, Virtual Reality அம்சம் கொண்ட ஹெட்செட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த ஹெட்செட்டை, கண்களில் மாட்டிக் கொண்டு, நாம் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிளின் இந்த நவீன ஹெட்செட்டில், பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது, முன்பு வெளியான விர்ச்சுவல் -ரியாலிட்டி ஹெட்செட்களை பயன்படுத்தும்போது, நிஜ உலக சூழலில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. ஆனால், தற்போது உருவாகியுள்ள ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் மூலம், அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த ஹெட்செட்டை பயன்படுத்தும்போது, நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையும் அறிய முடியும், கனிணியில் நாம் காண விரும்பும் காட்சியை 3D-யிலும் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்