இலங்கை செய்தி

காசாவில் உள்ள 17 இலங்கையர்கள் பற்றிய சமீபத்திய தகவல்

காசாவில் உள்ள 17 இலங்கையர்களை பாதுகாப்பாக எகிப்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பலஸ்தீனத்துக்கான இலங்கை பிரதிநிதி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காசா பகுதிக்கு சுமார் 20 உதவி பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை அனுப்ப ரஃபா நுழைவாயிலை திறக்க எகிப்து ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறுகிறார்.

காசா-எகிப்து எல்லையில் உள்ள இந்த நுழைவாயில் ரஃபா என்று அழைக்கப்படுகிறது.

எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இஸ்ரேல்-காசா மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4,500ஐ தாண்டியுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!