இலங்கை செய்தி

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் உடலுக்கு இறுதி அஞ்சலி

ஹமாஸின் பிடியின் பணயக் கைதியாக இருந்ததாகக் கூறப்படும் இலங்கையரான சுஜித் யத்வார பண்டாரவின் பூதவுடலுக்கு இஸ்ரேல் தூதரகத்தில் இன்று மத சடங்குகள் செய்யப்பட்டன.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் சுஜித் பண்டார யட்டவர, கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.

அவரது பிள்ளைகளின் மரபணு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவரை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

வென்னப்புவவை சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இஸ்ரேலில் தாதியாக பணியாற்றிய இலங்கைப் பணிப் பெண்ணான அனுலா ஜயத்திலக்க என்பவரும் ஹமாஸின் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!