இலங்கை

மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்(NBRO) 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை(Badulla) மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும் ஊவபரணகம, காலி(Galle) மாவட்டத்தின் நெலுவ, கம்பஹா(Gampaha) மாவட்டத்தின் அத்தனகல்ல, கண்டி(Kandy) மாவட்டத்தின் தெல்தோட்ட மற்றும் தொழுவ, கேகாலை(Kegalle) மாவட்டத்தின் மாவனெல்ல, ருவான்வெல்ல, அரநாயக்க மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் முதலாம் கட்ட எச்சரிக்கையின் (நிலை 1) கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் அலவ்வ மற்றும் ரிதீகம, மாத்தளை(Matale) மாவட்டத்தின் உக்குவெல, ரத்தோட்டை, யட்டவத்த, மாத்தறை(Matara) மாவட்டத்தின் பிட்டபெத்தற, மொனராகலை(Monaragala) மாவட்டத்தின் மெதகம, நுவரெலியா(Nuwaraeliya) மாவட்டத்தின் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, வலப்பனை, இரத்தினபுரி(Ratnapura) மாவட்டத்தின் கலவான, இம்புல்பே, எஹெலியகொட மற்றும் வெலிகெபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!