இலங்கை

நிலச்சரிவு அபாயம் – பதுளை மாவட்டத்தில் இருந்து 238 குடும்பங்கள் வெளியேற்றம்!

நிலச்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டம் முழுவதும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக  மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

“பதுளை மாவட்டத்தில் உள்ள பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 14 பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.  களுகெல்லையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 129 பேர் நிலச்சரிவு காரணமாக பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வெளியேற்றங்களும் நேற்று (10) நிறைவடைந்ததாக அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!