இலங்கை

தாய்லாந்தின் சீனி தொழிற்சாலையை அமைப்பதற்கான நிலம் ஒதுக்கீடு!

தாய்லாந்தின் Sutech Sugar Industries கம்பனியால் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் வவுனியாவில் கரும்பு பயிரிடலை மேற்கொள்வதற்கும், சீனி உற்பத்தி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (28.06) முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இந்த முதலீட்டை மேற்கொள்வதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பற்றைக்காடுகளைக் கொண்ட வவுனியா வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 200 ஹெக்ரெயார் காணித்துண்டு அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!