மத்திய கிழக்கு

குவைத்தில் 10,000 க்கும் மேற்பட்டவர்களின் குடியுரிமை இரத்து

குவைத்தில் 2011ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஒகஸ்ட் மாதத்திற்கு இடையில் இரட்டை குடியுரிமை கொண்ட 10,000 க்கும் மேற்பட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்துள்ளதாக KUNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண குவைத்தின் தசாப்த கால முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

மேலும் சட்டவிரோதமாக குவைத் குடியுரிமை பெறுபவர்களை ஒடுக்க கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பிரச்சாரத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குவைத் இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை, மேலும் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர்கள் 18 வயதை எட்டிய இரண்டு ஆண்டுகளுக்குள் குவைத் தேசியம் மற்றும் அவர்களது பிற தேசத்தை தேர்வு செய்ய வேண்டும்.

குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சவுதி, ஈராக், சிரியா, ஈரானிய மற்றும் ஜோர்தானிய நாட்டினர் என தெரியவந்துள்ளது.

குவைத் நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பவர்களின் நிலையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை சமீப ஆண்டுகளில் முடுக்கிவிட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content