இந்தியா

கிருஷ்ணகிரி விபத்து! 9 பேர் பலி – மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்

கிருஷ்ணகிரியில் 9 பேரை பலிகொண்ட பட்டாசு கிடங்கு விபத்துக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது காரணம் அல்ல என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அமளிக்கு நடுவே கிருஷ்ணகிரி விபத்துக்கான காரணம் பற்றி அ.தி.மு.க. உறுப்பினர் எம். தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கமளித்த பெட்ரோலிய அமைச்சர், விபத்து நடந்த குறிப்பிட்ட உணவகத்துக்கு எந்த நிறுவனமும் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கவில்லை என்று தெரிவித்தார்.

பட்டாசுக் கிடங்கு விபத்து நடந்த இடம் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருப்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், உரிமம் பெறாமல் குடியிருப்புப் பகுதியில் பட்டாசு கிடங்கு எப்படி இயங்கி வந்தது என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்

இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்குமாறு மாநில அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!