இலங்கை செய்தி

கிவுல் ஓயாத்திட்டம் – முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு

இலங்கையில் வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பில் திங்கட்கிழமை (09) வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளுராட்சி மன்றங்களினுடைய பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றம் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின்போது கொழும்பிலிருந்து வருகை தரவுள்ள மாகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் தரப்பினர்களுக்கு காணப்படும் சந்தேகங்களுக்கான பதிலளிப்புக்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கள ஆய்வு இதேவேளை, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயாத் திட்டம் சம்பந்தமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளும் மிகத்தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினை அடுத்து, கிவுல் ஓயாத் திட்டத்தினை முன்னெடுப்பதால் காணப்படுகின்ற பிரச்சினைகளை கண்டறியும் முகமாகவே குறித்த கள ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் குறித்த திட்டத்துக்கான அங்கீகாரத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியிருந்த நிலையில் அத்திட்டம் தொடர்பாக அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை. எனினும் தற்போது மக்கள் எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் கள ஆய்வுப் பணிகளை அவசரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தவின் பங்கேற்புடன் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாவட்டச் செயலகத்தில் கிவுல் ஓயாத் திட்டம் சம்பந்தமாக இறுதியான கூட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!