ஆஸ்திரேலியா

ஆஸியில் இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் !

ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.அத்துடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோயில்களில் எழுதி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சிட்னியின் மேற்கு புறநகர் பகுதியான மெர்ரிலேண்டில் தங்கி படித்து வரும் 23 வயது இந்திய மாணவர், பகுதிநேர ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை காரில் அமர்ந்திருந்தபோது, அவரது காரை சூழ்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் காரை அடித்து நொறுக்கி மாணவரை வௌியே இழுத்து இரும்புக் கம்பிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த நியூசவுத்வேல்ஸ் பொலிஸார் தாக்கப்பட்ட மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content