பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் – பிரதம மந்திரி எலிசபெத் போர்னுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

கடந்த மாதம் மக்ரோனால் முன்வைக்கப்பட்ட குடியேற்ற மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதில் இருந்து பிரதம மந்திரி எலிசபெத் போர்னின் நிலைப்பாடு பலவீனமாக உள்ளது.
இந்நிலையில் பிரான் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் எலிசபெத் போர்ன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வடக்கு பிரான்சில் வெள்ளம் மற்றும் நாடு முழுவதும் உறைபனியை மையமாகக் கொண்டு விவாதம் நடத்தப்பட்டதாக அவரது அலுவலகம் கூறியது. இருப்பினும் பரவலாக கணிக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு பற்றி அவர்கள் விவாதித்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் மக்ரோனின் அரசியல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை மற்றும் குடியேற்றச் சட்டத்தின் மீதான கருத்து வேறுபாடுகளால் ஏற்கனவே பிளவுபட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)