பொழுதுபோக்கு

கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த ரசிகன் கொடூர கொலை! சைக்கோ தர்ஷன் குறித்த அதிர்ச்சி தகவல்

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தான் இப்போது சோஷியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருடைய ரசிகர் தற்கொலை செய்து கொண்டதாக உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் போலீஸ் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அதற்கு தர்ஷன் தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து தர்ஷன் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதன் பின்னணி என்ன என்று பார்ப்போம்..

கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி என்பவர் தர்ஷனின் காதலியான நடிகை பவித்ரா கௌடாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெசேஜ் செய்திருக்கிறார்.

இத்தனைக்கும் தர்ஷன் திருமணம் ஆகி மனைவி குழந்தைகளுடன் இருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பவித்ரா கௌடா செய்வது தவறு என ரேணுகா சாமி குற்றம் சொல்லி இருக்கிறார். அதையே மெசேஜ் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறார்.

இதுதான் இந்த கொலைக்கான பின்னணி காரணம். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில் ரேணுகா சாமியின் இறுதி நிமிடங்கள் மிகவும் கொடூரமாக இருந்ததற்கான போட்டோ ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

அதாவது அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்ட போது எந்த மாதிரியான நிலையில் இருந்தது என்பதை தெரிவிக்கும் வகையில் போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அவருக்கு தாடை உடைந்து உடலின் அனைத்து பாகங்களிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

அதேபோல் ரத்தம் உறைந்து, மின்சாரம் தாக்கியதற்கான அறிகுறிகளும் உள்ளது. கிட்டத்தட்ட உயிர் போகும் வரை கொடூரமான தாக்குதல் நடந்திருக்கிறது. இத்தனையும் தர்ஷன் கண் முன்பே நடந்துள்ளது.

மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இறந்த ரசிகரின் உடலை பார்க்கும் போதே ஈர கொலை நடுங்குகிறது. இதை பார்த்த அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அனைவரும் தர்ஷனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு கொலைகார சைக்கோ விசாரணை இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த ரசிகரை இவர் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்.

மேலும் விசாரணையில் தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கொலையை மறைக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது. அதை அவரும் ஒப்புக்கொண்டு உள்ளார்.. இதனால் விரைவில் இவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content