நிலவுக்கான தனது பயணத்தை ஜப்பான் இன்று தொடங்கியது

ஜப்பான் நிலவுக்கான தனது பயணத்தை இன்று தொடங்கியது.
இதற்கு முன் மூன்று முறை, ஜப்பான் நிலவை ஆய்வு செய்யத் தயாரானது, ஆனால் வானிலை பாதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
ஜப்பான் தனது நிலவில் ஆய்வு செய்யும் ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் தனது நிலவு ஆய்வுக்கு “மூன் ஸ்னைப்பர்” என்று பெயரிட்டுள்ளது. ஜப்பானின் திட்டப்படி, இந்த பயணம் வெற்றிகரமாக நிலவை அடைந்தால், அடுத்த பிப்ரவரி மாதம் நிலவில் தரையிறங்கும்.
அதன்படி, ஜப்பானின் நிலவுப் பயணம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறங்கும் ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும்.
(Visited 10 times, 1 visits today)