இலங்கை செய்தி

ஜப்பான் இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் அவசர உதவி

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் அவசர மானியத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய அன்றாடத் தேவைகள் உட்பட சர்வதேச உதவி நிறுவனங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்க இந்த மானியம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விரைவான மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பை உறுதி செய்வதற்காக ” நீண்டகால நண்பரான இலங்கைக்கு தடையற்ற ஆதரவை” தொடர்ந்து வழங்கும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

இரண்டு வார காலப்பகுதியில் சுமார் 1,250 மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய பின்னர் ஜப்பானிய பேரிடர் நிவாரண மருத்துவக் குழு இலங்கையில் இருந்து புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!