ஜப்பானின் பொதுத்தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்து இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (ஜனவரி 23) அதிகாலை ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையை கலைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது.
நாடாளுமன்ற சபாநாயகர் கலைப்பு கடிதத்தை வாசித்தபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பாரம்பரிய “பான்சாய்” (Banzai) கோஷங்களை எழுப்பி இதனை வரவேற்றனர்.
அறிவிப்பின்படி, ஜப்பானியப் பொதுத்தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 8-ஆம் திகதி நடைபெறும்.
இதற்கான உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சாரங்கள் ஜனவரி 27 முதல் 12 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற சனே தகாச்சி, மிகக் குறுகிய காலத்திலேயே தேர்தலைச் சந்திக்கத் துணிந்துள்ளார்.
தற்போது அவருக்கு மக்களிடையே சுமார் 70 சதவீத ஆதரவு காணப்படுகிறது.
இந்த அபரிமிதமான மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் தனது தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (LDP) பலத்தை மேலும் உறுதிப்படுத்தவும், தீர்க்கமான கொள்கை முடிவுகளை எடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜப்பானில் பிப்ரவரி 8ம் திகதி இடைத்தேர்தல்





