இந்தியா

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் பகுதியில் நேற்று மதியம் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் தோடா மாவட்டங்களில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்த 10 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.28 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது லேவிலிருந்து வடகிழக்கே 270 கி.மீ., 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது.

இன்று அதிகாலை 2.16 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் மாலை 3.50 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!