புதுடில்லிக்கு புறப்பட்டார் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி.எஸ். ஜெய்சங்கர், தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து இந்தியாவின் புதுடில்லிக்கு புறப்பட்டார்.
இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட பல தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்பின்னர் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரிகள் குழு, சந்தோஷ் ஜா உட்பட, இலங்கை வெளியுறவு
அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழுவும், ஜெய்சங்கர் விடைபெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் அவர் நேற்று (22) இலங்கையை வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





