இலங்கை செய்தி

யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு நீதவான் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், விரிவுரையாளரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்டு சட்ட மருத்துவ அறிக்கை சமர்பித்துள்ளார்.

அதில் பெண் விரிவுரையாளர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!