ஐரோப்பா

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு இத்தாலி பிரதமர் அழைப்பு!

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார்.

ரோமில் இன்று (23.07) நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “ஐரோப்பா மற்றும் இத்தாலிக்கு குடியேற்றம் தேவைப்படுபவர்களுக்கு சட்டப்பூர்வ வழிகள் திறந்திருப்பதாக தெரிவித்தார்.

“திரளான சட்டவிரோத குடியேற்றம் நம் ஒவ்வொருவருக்கும் தீங்கு விளைவிக்கிறது எனவும் மிகவும் பலவீனமானவர்களின் செலவில் பணக்காரர்களாகும் குழுக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 முதல் 2025 வரை ஐரோப்பிய ஒன்றியம் அல்லாதவர்களுக்கு 452,000 புதிய வேலை விசாக்களை வழங்க இத்தாலி உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!