இலங்கையில் முதல் பிறந்த தினத்தை கொண்டாடும் முன்பே 2500 குழந்தைகள் பலியாகுவதாக தகவல்!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/pr.jpg)
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்து பதின்மூன்றாயிரம் பெண்கள் கர்ப்பமாகிறார்கள், ஆனால் அந்த கர்ப்பத்திற்குப் பிறகு பிறக்கும் கிட்டத்தட்ட 2,500 குழந்தைகள் தங்கள் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள் என்று சமூக சுகாதார நிபுணர்கள் சங்கம் கூறுகிறது.
கர்ப்பமாகிவிட்ட பெண்களில், சுமார் 26,000 பேர் முதல் சில மாதங்களுக்குள் கருச்சிதைவுகளை அனுபவிக்கின்றனர் என்று சங்கத்தின் தலைவர், சிறப்பு மருத்துவர் கபில ஜெயரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 28 வாரங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட 1,700 குழந்தைகள் கருப்பையிலேயே இறக்கின்றன. இறுதியாக, தோராயமாக 280,000 நேரடி பிறப்புகள் பிறக்கின்றன.
இந்தக் குழந்தைகளில் கணிசமான எண்ணிக்கையிலானவை குறைந்த பிறப்பு எடையுடன் பிறக்கின்றன. ஏறக்குறைய 20 ஆயிரம்பேர் குறைந்த எடையுடன் பிறப்பிக்கின்றன.
இறுதியில், இந்தக் குழந்தைகளில் சுமார் 2,500 பேர் தங்கள் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்பே பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர்.
இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டால், இந்த இறப்புகளில் சுமார் 46% பிறப்பு குறைபாடுகளாலும், அதைத் தொடர்ந்து 26% குறைமாத குழந்தைகளாலும், சுமார் 12% பேர் மூச்சுத் திணறலாலும், சுமார் 6% பேர் புதிதாகப் பிறந்த காலத்தில் தொற்றுகளாலும் இறக்கின்றனர்” எனத் தெரிவித்தள்ளார்.