ரஃபா நகரைக் கைப்பற்ற தயாராகும் இஸ்ரேல் தரைப்படை!

பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளன.
சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் இதனை செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இந்த நகரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே யுத்தம் காரணமாக பலர் வீடுகளை இழந்த நிலையில் அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ஆனால் இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு அந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்.
(Visited 20 times, 1 visits today)