ஈரானியர்களின் இரத்தத்திற்கு பழிவாங்கப்படும் – கமேனியின் மகன் சபதம்
ஹார்முஸ் நீரிணை வழியில் தொடர்ந்தும் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக தனது முதல் அறிவிப்பில் ஈரானின் புதிய உச்ச தலைவர், சபதம் செய்துள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு சபதம் எடுத்தார்.
கொலை செய்யப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்கு ஈரான் பழிவாங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் போராட்ட சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் உள்ளூர் மக்கள் போர் தீவிரமும் வேலை நிறுத்தங்களாலும் அச்சமடைவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.




