அமெரிக்காவுடன் பேச்சு நடத்தவில்லை: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் மறுப்பு!
அமெரிக்க ஜனாதிபதி கூறுவதுபோல இரு நாடுகளுக்கும் இடையில் எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
போரின் மூலம் தான் அடைய நினைக்கும் இலக்குகளை எட்டும் வரை அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்தார்.
இந்நிலையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





