உலகம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஈரானிய பிரதிநிதிகள் பங்கேற்க தடை!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஈரானிய பிரதிநிதிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா (Roberta Metsola) இன்று எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை அறிவித்தார்.

ஈரானின் அனைத்து இராஜதந்திர ஊழியர்களையும், பிற பிரதிநிதிகளையும் ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகங்களில் இருந்து தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், “ஈரானின் துணிச்சலான மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், இன்று அனைத்து இராஜதந்திர ஊழியர்களையும், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிற பிரதிநிதிகளையும் அனைத்து ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகங்களிலும் இருந்து தடை செய்ய முடிவு செய்துள்ளேன்.

“சித்திரவதை, அடக்குமுறை மற்றும் கொலை மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இந்த ஆட்சியை சட்டப்பூர்வமாக்க இந்த அவை உதவாது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!