அணுசக்தி திட்டம் குறித்த “மறைமுக பேச்சுவார்த்தைகளுக்காக” அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் ஈரானிய குழு!

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்த “மறைமுக பேச்சுவார்த்தைகளுக்காக” அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க ஈரானிய தூதுக்குழு ஓமானின் தலைநகர் மஸ்கட்டை வந்தடைந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வார தொடக்கத்தில் சனிக்கிழமை பேச்சுவார்த்தைகளை முன்னோட்டமாகக் காட்டி, அவற்றை ஒரு “மிகப் பெரிய சந்திப்பு” என்றும், இது ஒரு தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாகும் என்றும் விவரித்தார்.
“மேலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்காவின் வாய்ப்பை தெஹ்ரான் கடந்த மாதம் நிராகரித்தது.
ஈரானின் வெளியுறவு மந்திரி சையத் அப்பாஸ் அரக்சி, சனிக்கிழமை சந்திப்பை “ஒரு சோதனை போலவே ஒரு வாய்ப்பு” என்றும் விவரித்திருந்துமை குறிப்பிடத்தக்கது.