ஐரோப்பா

ஹிஜாப் அணியாமல் தொடரில் பங்கேற்ற ஈரானிய செஸ் வீராங்கனை: குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்ட ஈரானிய பெண்ணுக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கியுள்ளது.

கடந்த டிசம்பரில் கஜகஸ்தானில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சாரா காடெம் என்று அழைக்கப்படும் 26 வயதான சரசதத் கதேமல்ஷாரி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.இது ஈரானின் இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து அந்நாட்டு செஸ் கூட்டமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்தது.

ஹிஜாப் இல்லாமல் செஸ் தொடரில் பங்கேற்ற ஈரானிய பெண்: குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்

மேலும் ஈரானிய அரசு சாரா காடெமை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஈரானுக்கு திரும்பி சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற நிலையில் சாரா காடெம் தன்னுடைய குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் ஜனவரியில் குடியேறினார்.

இந்நிலையில் சாரா காடெமிற்கு ஸ்பெயின் அதிகாரப்பூர்வ குடியுரிமை வழங்கப்படுவதாக புதன்கிழமை ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வ வர்த்தமானி அளித்த தகவலில், சாரா காடெமின் சிறப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு குடியுரிமை ஸ்பெயின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது என்று தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!